Friday 15 April 2011

பரம்பரை வீட்டு வைத்தியம்

மார்ச் 13, 2010 — சிவா
அஜீரணசக்திக்கு
அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.
அம்மைநோய் தடுக்க!
அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.
அறுகம் புல்
இந்த அறுகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்தநீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தழடற்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆடூடம் கூறுகிறது.


அம்மைநோய் வேகத்தை தணிக்க!
பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.
அகத்திக்கீரை
உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது.. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது.. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம்., தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.
ஆறு சுவையின் செயல்!
காரம்-உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.
கசப்பு – உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சழியைக் கட்டுப்படுத்தும்.
இனிப்பு – உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
புளிப்பு – இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.
துவர்ப்பு – இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
உப்பு – ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கதை ஏற்படுத்தும்
அன்னாசிப்பழம்
இந்த அன்னாசிப்பழம் இரத்தத்தைச் சுத்தி செய்கிறது. ஜீரணசக்தியை கூட்டும் தன்மையுள்ளது இதில் இருக்கும்-ப்றோமலென்| (Bromelan) என்னும் தாதுப்பொருள் வாதத்தை தணிக்கவல்லது. நன்கு பழுத்த,பழங்களையே சாப்பிடவேண்டும்.
அரைக்கருப்பன் சரியாக!
இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய் பாலில்  ஊறவைத்து பின் வேகவைத்து அது நன்கு சுண்டக்காச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும்.
மார்ச் 13, 2010 — சிவா
பப்பாசிப்பழச்சாறும் பசுப்பாலும் கலந்து பூசிலாம் தரைப்பசலிக்கீரையும் மஞ்சள்தூளும் சேர்த்து பூசினால்குணமாகிவிடும்,
ஆசனவாசலில் குடைச்சலுக்கு-இப்படியான அரிப்பு வயிற்றில் புழுக்கள் இருக்கும் பிள்ளைகளுக்கும் மூலவியாதி இருப்பவரகளுக்கும் காணப்படும். இதற்கு பாகல் இலை அல்லது முள்முருங்கை இலை-தளிர் இவற்ரில் ஏதாவது ஒன்றை அரைத்து தேனுடன் கலந்து பூசினால் அரிப்பு குணமாகும் அதன்பின் மூலகாரணம் அறிந்து தகுந்த சிகிச்சை செய்யவேண்டும்.. கருஞ்சீரகத்தையும் தேனுடன் அரைத்து பூசினால. அரிப்பு குணமாகும்.
ஆரோக்கியத்திற்கு!
தேகஆரோக்கியத்திற்கு உணவு முக்கியம். தகுதியான உணவை அளவுடன் உண்ணவேண்டும். அரைவயிறு உணவும், கால்வயிறு தண்ணீரும் கால்வயிறு காலியாகவும் இருப்பது அவசியம். தினம் உடற்பயிற்சி,யோகாசனம் செய்தால் ஆரொக்கியம் கிடைக்கும்.
ஆண்கள் மலடு தீர!
ஆண்களுக்கு அவரது இந்திரியத்தில்-ஈஜீஎப்| (EGF) என்னும் இரசாயனச்சத்து குறைவதால் ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு இந்த ரசாயனச்சத்தை மருத்துவர் மேற்பார்வையில் பாவித்தால் மலடுதீரும். எமது சித்தரகள் அறிவுறுத்தலுக்கு அமைய யோகாசனம் செய்தாலும் குறிப்பாக ஹலாசனம், சர்வாங்காசனம், சற்பாசனம் சாந்தி ஆசனம் ஆகியவற்றை தினம் செய்தால் சிலநாட்களில் நற்பயன் கிடைக்கும்.
ஆண்மை வலுப்பெற!
அரசம்பழத்தை பாலில்போட்டு காச்சி வெல்லத்துடன் தினம் பருகிவந்தால் ஆண்மை வலுப்பெறும், தழற்சிநீங்கும்.. ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில்கலந்து குடித்தாலும் தழற்சிநீங்கும். செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து வென்சூட்டில் சர்க்கரைசேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும். பேரீச்சம்பழம்,உழுந்து இவைகளை தேனுடன்சேர்த்துஅருந்தினால்தழர்வு நீங்கும்.. இலுப்பைப்பூகஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்துவரின் ஆண்மை வலுப்பெறும்.
இசைமருத்துவம்!
இன்றையநவீனவிஞ்ஞானமுறைப்படி மேல்நாடுகளிலும்,சீனா,ஜப்பான்போன்ற நாடுகளிலும்  இசையைப்பயன்படுத்துகின்றனர். சிலநோய்களுக்கு தகுந்த இசையை தேர்ந்தெடுத்து அதை இசைத்தட்டில் பாடவைத்து நோயாளிமட்டும் கேட்ககூடிய செவிக்கருவியில்பொருத்தி தினம் சில நேரங்கள் அந்த இசையைச்செவிமடுக்க வைப்பாரகள். இந்த இசை மருத்துவம அமோகவெற்றியளிப்பதாக நம்பப்படுகிறது. எமது மூதாதையர் பலநோய்களையும் குணமாக்க திருவாசகம் போன்றசுவையான பாடல்களை பயன்படுத்துனர் என்பது எம்மவர் அறிந்ததே. இப்போதுதான் நமது நவீனவிஞ்ஞானிகள
இந்த உண்மையை கண்டறிந்திருக்கின்றனர. இனியாவது எம்மவர் இதைநம்பி இசையை நோய்கள் தீரப்பயன்படுத்தட்டும்.
இரத்தம் பெருக!
இரத்தம் உடம்பில் விருத்தியாக அதிகம் கீரை உணவுகள் பழவகைகள் தினம் போதிய நீர் அருந்துதல் அவசியம்.. இறைச்சி,ஈரல்,மீன்முதலியவை அதைஉண்பவருக்கு உடன்இரத்தம் விருத்தியாக உதவும். தக்காளனிப்பழமும் -பீறுறூற்|இரத்த உற்பத்திக்கு உதவக்கூடியவை. தினம் உடற்பயிற்சியும் இடைவிடாது நடப்பதும் இரத்தவிருத்திக்கு உதவும். பாதாம் பருப்பு பாலுடன் உண்பதால் இரத்தவிருத்தி உண்டாகும். அத்திப்பழத்துடன் பாலும்சேரத்து அருந்துவதும் இரத்த விருத்திக்கு உதவும்.
இளநீர் மருத்துவம்!
இளநீரில் தாதுப்பொருள்களாகிய இரும்பு, பொற்ராசியம், சுண்ணாம்புச்சத்து, சோடியம் ஆகியவை அதிகம் இருப்பதால் சிறுநீரக நோய்களை தடுக்கவும் குணமாக்கவும் பெரிதும் உதவும். குடலில் புளு பெருகுவதையும் குறைக்க வல்லது.
மார்ச் 13, 2010 — சிவா
வயதானவுடன் தலை நரைத்துப் போவது என்பது இயற்கையானது. ஆனால் பத்து பதினைந்து வயதிலேயே சிலருக்கு நரை தோன்ற ஆரம்பித்து விடும். இதற்குப் பாரம்பரியம் மற்றும் ஹார்மோன்கள்தான் காரணம் என்றாலும் ரசாயன குணமுள்ள ஷாம்பூ மற்றும் சோப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், சரியான உணவு முறைகளைக் கடைப்பிடிக்காமல் போவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. இளம் வயதில் நரை ஏற்பட்டால் அதனைத் தவிர்த்து சரி பண்ண முடியும்.
குறைபாட்டை நீக்கும் முறைகள்:
1. சீயக்காய், நெல்லிக்காய், கடுக்காய், பயற்ற மாவு போன்ற பொருள்களைத் தலைக்குப் பயன்படுத்தலாம்.
உணவு:
இரும்புச் சத்துள்ள உணவுகளான கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, மீன் போன்றவற்றைச் சரிவிகிதமாக சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டு வந்தால் நரைமுடியை 10 சதவீதம் தவிர்க்க முடியும்.
பி காம்ப்ளக்ஸ், கால்சியம், இரும்புச்சத்து, புரதச் சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கூந்தலுக்கு எப்பொழுதும் எண்ணெய்ப்ப்பசையும் , நீர்ச்சத்தும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஹென்னா பயன்படுத்தி நரைமுடி தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். ஹென்னா பயன்படுத்தும்பொழுது முறையான பயிற்சி வேண்டும். சரியான முறையில் ஹென்னாவைச் சேர்த்துப் போட வேண்டும். ஷாம்பூ அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தும்பொழுது ஒரு கோப்பை தண்ணீரில் ஷாம்பூவைக் கலந்து பின்பு பயன்படுத்த வேண்டும். அப்பொழுது ஒரே இடத்தில் ஷாம்பூ இல்லாமல் பரவலாக இருக்கும்.
நரைமுடி இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »


அக்டோபர் 5, 2008 — சிவா
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது
1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,
3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.
விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவி லும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள
சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.

அக்டோபர் 5, 2008 — சிவா
முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும்… வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்…
தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.
தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ; செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும்.
சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும். வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றhக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.
முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக வேண்டுமா?
கோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து ஒரு ஸ்பூன்
தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில் மறுபடியும் தடவவும்.
நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.
கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.
ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.
சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.
பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும்
சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.
ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.

ஆகஸ்ட் 14, 2009 — சிவா
பிறந்தகம் அந்நிய பூமியாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு முன்பே நம் மண்ணைப் புகுந்த இடமாகக் கொண்டு அங்கிங்கெனாத படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மலர்களின் ராஜாவான ரோஜா மலரின் மருத்துவக் குணம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
இதனை சம எடையாக சீனக் கற்கண்டுடன் தேன் சேர்த்து அன்றாடச் சூரிய வெயிலில் வைத்து எடுத்துக் கொண்டு காலை,மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் சிறப்பாகத்தந்து மகிழ்விக்கும்.
குழந்தைகளின் சீதபேதிக்கு இதனிடம் இருக்கும் துவர்ப்புச்சத்து மருந்தாகி குணமாக்குகிறது. அஜீரணமா? வயிற்று வலியா? வேக்காளமா? அனைத்தும் இதனைத் தொகையலாக்கி உண்டாலே பறந்தோடும் என்பதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.
மலம் இறுகிய குழந்தைகட்கு இது சிறிது மலமிளக்கியாகவும் வேலை செய்கிறது.
அன்பிற்குரியோருக்கு தந்தது ஆரத் தழுவ வைக்கும் இந்த ரோஜாவிலிருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது. பூவையர்க்கு ஏற்படும் கருப்பை தொடர்பான வியாதிகளுக்கு நன்கு வேலை செய்து அவர்களைப் புன்னகை பூக்க வைகப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது ரோஜா.

அக்டோபர் 5, 2008 — சிவா
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.
இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.
திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அக்டோபர் 5, 2008 — சிவா
முடி உதிர்வதை தடுக்க
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
வழுக்கையில் முடி வளர:
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இளநரை கருப்பாக:
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
முடி கருப்பாக:
ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
தலை முடி கருமை மினுமினுப்பு பெற:
அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
செம்பட்டை முடி நிறம் மாற:
மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
நரை போக்க:
தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:
கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
சொட்டையான இடத்தில் முடி வளர:
நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
புழுவெட்டு மறைய:
நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

ஆரஞ்சுப் பழம்

ஆரஞ்சில் வைட்டமின் ஏ அதிகமாகவும், வைட்டமின் சி-யும், பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.
இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

பேய்ச்சுரை (அ) காட்டுச்சுரை

| வியாழன், 19 ஆகஸ்ட், 2010
இதனை பேய்ச்சுரை அல்லது காட்டுசுரை எனவும் அழைப்பர். காட்டுச்சுரை (அ) பேய்ச்சுரை கசப்பாக இருக்கும். மருத்துவத்துக்கு இவற்றின் இலை, கொடி, காய், விதை என அனைத்தும் பயன்படுகிறது. இந்த பேய்ய்சுரையின் மருத்துவக் குணங்கள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

எவ்வளவு கடுமையான விஷக்கடியாக இருந்தாலும் இது விஷத்தை முறித்து
 துரித குணத்தை உண்டாக்கிவிடும்.

பேய்ச்சுரையின் வேரைச் சேகரித்து நன்கு அரைக்க வேண்டும். இதை விஷத் தீண்டலுக்கு உள்ளானவர்களுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். இந்த இலையை அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டிவிட வேண்டும். திடீரென ஏற்படும் பேதி, வாந்தி முதலியவற்றால் விஷத்துக்கு முறிவு ஏற்பட்டு விஷக்கடிக்கு ஆளானவரின் உயிர் மீளும்.

சிலவகைப் பாம்புகள் கடித்தால் அவற்றின் விஷ வேகம் மிகவும் துரிதமாக இரத்தத்தில் கலந்து, இருதயத்தை அடைந்து முச்சடைத்து மனிதன் இறந்துவிடுவான் , ஆனால் அவசர உணர்வோடு பேய்ச்சுரையை உபயோகித்தால் விஷத்தை முறித்துவிடலாம்.

கொடிய விஷப்பாம்பு கடித்து மனிதன் உணர்விழந்துவிட்டான் என்றால் முதலில் நாம் செய்யவேண்டியது அவனுக்கு உணர்வு ஊட்டி நினைவுண்டாக்க வேண்டியத்தான். இதற்கு பேய்ச்சுரையின் இலைகளைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து சம அளவு தும்பை இலைச்சாறு சேர்த்து மூக்கில் சில துளிகள் விட்டு ஊதிவிட வேண்டும். ஒரு தும்மலோடு விஷக்கடிக்கு ஆளானவருக்கு நினைவு திரும்பிவிடும்.

நினைவு திரும்பிய மறுகணமே பேய்ச்சுரையின் வேரை அரைத்து உள்ளுக்குக் கொடுத்துவிட வேண்டும். உடன் விஷ் முறிவு ஏற்பட்டு குணம் தெரியும். விஷக்கடிக்கு உள்ளானவரை விஷம் முறிவு ஏற்பட்டு சில நாட்கள் வரை பத்திய உணவு மேற்கொள்ளச் செய்ய வேண்டும்.

You might like:
முட்டிக்கு எண்ணெய் தடவுங்க!
How Well Is Your Brain Working?
துளசி
எளிய மருத்துவக் குறிப்புகள்
எளிய மருத்துவக் குறிப்புகள்
துளசி
How Well Is Your Brain Working?
முட்டிக்கு எண்ணெய் தடவுங்க!
[?]

அரளிச்செடி

| திங்கள், 9 ஆகஸ்ட், 2010
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLMi-GZmuZWpn3WJrvdYni8n22l1yzEKe2kPJQywf3mRu8woMHxTVeDtX2nauHSOUkCKNpcWLdxhlF4-dv5i95N_7m7h_0a7nHgD3tdk_9hQxFiU_2tlNF9854YGDVrpihH6YcppKJgice/s320/arali.jpg


எங்கும் எளிதாகக் கிடைக்கும் அரளிச்செடி! அதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே பல்கிப் பெருகும் இயல்புடையது. இதனுடைய இலையையோ, வேரையோ யாரும் மருத்துவ நோக்கில் யாரும் பயன்படுத்த மாட்டார்கள், பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவை கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்தவை. அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும்.

இதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் யன்படுத்தினால் தலை எரிச்சல், சுரம், பித்தக் கோளாறுகள் போன்றவை அகலும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.

வறண்ட நிலத்தில் கூட அரளி அழகாக பூத்து அருமையான வாசனையைத்தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் அருகில் கூட போவதில்லை என்பது இயற்கையின் வினோதம்தான். வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை சாலைகளில் தடுப்பரண்களாக வளர்க்கிறார்கள். தூசு, இரைச்சல் இவற்றையெல்லாம் தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது. மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் அரளி தாவரம் வளர்க்கப்படுகிறது.

அரளி தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி, நினைவிழப்பு, மயக்கம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். அரளி நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் சம்பவிக்கவில்லையென்றால் அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.

அரளி நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும், வயிற்றை காலிசெய்வதும், செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.
You might like:
நெல்லிக்கனி - முதுமைக்குச் சவால்
அகத்திக் கீரை
அக்கரகாரம்
தேன் மருத்துவம்
தேன் மருத்துவம்
அக்கரகாரம்
அகத்திக் கீரை
நெல்லிக்கனி - முதுமைக்குச் சவால்
[?]

பயன்மிக்க சித்த மருத்துவக் குறிப்புகள்

| ஞாயிறு, 30 மே, 2010
ஆண்மைக் குறைவு நீங்க : தினசரி இரவு படுக்கைக்குச் செல்லும் மூன்று மணி நேரத்திற்கு முன் ஒரு மாதுளம் பழம் முழுவதும் சாப்பிட்டு வர ஆண்மைக் குறைவு நீங்கும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க : அடிக்கடி மாம்பழத்தைச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்
.
கருவுற்றிருக்கும் தாய்ய்ய்ய்மார்களுக்கு : கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழத்தைச் சாப்பிட்டு வர, பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

மலச்சிக்கல் தீர : மலச்சிக்கலில் சிரமப்படுவோர் இரவில் மாம்பழத்தைச் சாப்பிட்டுவர, மலச்சிக்கல் சரியாகும்.

பற்களும் ஈறுகளும் உறுதியடைய : நெல்லிக்கனியைப் பற்களிளால் நன்றாக மென்று தின்று வர பற்களும் ஈறுகளும் உறுதியாகும்.

இரத்த கொதிப்பு குணமாக :
இரத்த கொதிப்பு நோய் கொண்டவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வர, இரத்தக் கொதிப்பு நோய்


பப்பாளி

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப் பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

இஞ்சி

இஞ்சி
இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சியைப் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் 10 ஆண்டுகள் நடத்தலாம் என்று நம்பிக்கை தோன்றும்?
தமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் கொண்ட மூலிகையும் நம் நாட்டில் உண்டு. சுற்றி வளைக்காமலே கூறிவிடுகிறேன். நமது தென்னக சோலை வனப் பயிர்களில் ஒன்றாகிய உயர்ந்த இஞ்சிக்கு தான் சுக்கு என்று பெயர், அதாவது சுக்கு என செல்லமாக அழைத்துப் பின்பு சுக்கு முதலியாரே! என்று கூப்பிடுவது நம் நாட்டு பழக்கமாயிற்றே!
சுக்கும் சுப்பிரமணியமும் ஒன்றுதான். சுக்கு, இஞ்சியான உலராத சுக்கு இவைகளை எல்லா மதத்தினரும், இனத்தவரும் விரும்பி மஜத் சுல்தான், டேவிட் பிள்ளை மரியதாஸ், போன்ற முஸ்லீம் கிருஸ்துவ நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை
சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை
என்பது பழமொழி அல்லவா?
நமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக ஸ்தானம் வகிக்கக்கூடியது சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது. இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை மூன்றும் சமையல் அறையின் இணைபிரியாத நண்பர்கள்.
இஞ்சி பொதுக் குணம்
இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.
உபயோக முறைகள்
இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த žதளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜரணிக்க செய்து விடுகிறது.
இஞ்சியின் குணமேதென்றால்
இயல்புடன் உரைக்க கேளீர்
அஞ்சிடும் கன்னியாவும் அகன்றிடும்
பித்ததோடம்
நெஞ்சினில் இருமல் கோழை
நெகிழ்ந்திடும்
கபங்கள் தன்னை
மிஞ்சினி வருமேவென்றும் விளம்பிடும்
வேதநூலே (ஓலைச் சுவடி)
சித்த மருத்துவர்களிடம் ஓர் ரகசியமுண்டு. எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்žவி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். பிணிகளும் விரைவில் மிச்சம் மீத இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும். ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது.
இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமை! ஊறுகாய் வியாபாரம் மந்தமாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம். ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர்! அதாவது இஞ்சி ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து அதை மிக்சர்களில் கலந்து செரிப்புண்டாக்க கொடுக்கின்றனர். மதுவிலக்கு அமுலுக்கு வந்தபின் இந்த ஜிஞ்சர் பெரீஸ் டிஞ்சருக்கு (கெமிஸ்டுகளிடம்) இங்கிலீஸ் மருந்து கடைகளில் ஏகப்பட்ட கிராக்கி (பிளாக்மார்க்கெட்). டாக்டர்களுக்கும் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆனால் புட்டி புட்டியாக எங்குதான் போகின்றனவே? முருகன் தான் அறிவார் இந்த பிளாக் மார்க்கெட்டை!
இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் žவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே!
இஞ்சி முறபா
மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.
ஆஸ்துமா இருமலுக்கு
இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)
இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை.
இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சியைப் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் 10 ஆண்டுகள் நடத்தலாம் என்று நம்பிக்கை தோன்றும்?
தமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் கொண்ட மூலிகையும் நம் நாட்டில் உண்டு. சுற்றி வளைக்காமலே கூறிவிடுகிறேன். நமது தென்னக சோலை வனப் பயிர்களில் ஒன்றாகிய உயர்ந்த இஞ்சிக்கு தான் சுக்கு என்று பெயர், அதாவது சுக்கு என செல்லமாக அழைத்துப் பின்பு சுக்கு முதலியாரே! என்று கூப்பிடுவது நம் நாட்டு பழக்கமாயிற்றே!
சுக்கும் சுப்பிரமணியமும் ஒன்றுதான். சுக்கு, இஞ்சியான உலராத சுக்கு இவைகளை எல்லா மதத்தினரும், இனத்தவரும் விரும்பி மஜத் சுல்தான், டேவிட் பிள்ளை மரியதாஸ், போன்ற முஸ்லீம் கிருஸ்துவ நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை
சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை
என்பது பழமொழி அல்லவா?
நமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக ஸ்தானம் வகிக்கக்கூடியது சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது. இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை மூன்றும் சமையல் அறையின் இணைபிரியாத நண்பர்கள்.
இஞ்சி பொதுக் குணம்
இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.
உபயோக முறைகள்
இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த žதளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜரணிக்க செய்து விடுகிறது.
இஞ்சியின் குணமேதென்றால்
இயல்புடன் உரைக்க கேளீர்
அஞ்சிடும் கன்னியாவும் அகன்றிடும்
பித்ததோடம்
நெஞ்சினில் இருமல் கோழை
நெகிழ்ந்திடும்
கபங்கள் தன்னை
மிஞ்சினி வருமேவென்றும் விளம்பிடும்
வேதநூலே (ஓலைச் சுவடி)
சித்த மருத்துவர்களிடம் ஓர் ரகசியமுண்டு. எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்žவி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். பிணிகளும் விரைவில் மிச்சம் மீத இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும். ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது.
இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமை! ஊறுகாய் வியாபாரம் மந்தமாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம். ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர்! அதாவது இஞ்சி ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து அதை மிக்சர்களில் கலந்து செரிப்புண்டாக்க கொடுக்கின்றனர். மதுவிலக்கு அமுலுக்கு வந்தபின் இந்த ஜிஞ்சர் பெரீஸ் டிஞ்சருக்கு (கெமிஸ்டுகளிடம்) இங்கிலீஸ் மருந்து கடைகளில் ஏகப்பட்ட கிராக்கி (பிளாக்மார்க்கெட்). டாக்டர்களுக்கும் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆனால் புட்டி புட்டியாக எங்குதான் போகின்றனவே? முருகன் தான் அறிவார் இந்த பிளாக் மார்க்கெட்டை!
இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் žவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே!
இஞ்சி முறபா
மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.
ஆஸ்துமா இருமலுக்கு
இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)
இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை

நெல்லிக்கனி - முதுமைக்குச் சவால்

| திங்கள், 3 ஆகஸ்ட், 2009

இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால் முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

நமது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இளமையின் வேகம் அவர் மனதில் என்றும் வற்றாத நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுபோல் நம் நாட்டில் ஏராளமானோர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சித்தர்கள், ஞானிகள் என்றும் இளைஞன் போல் வலம்வந்ததை பல ஏடுகள் மூலம் அறியலாம்.

எப்படி இவர்களுக்கு முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும்தான்.

முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முமுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது.

ஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர்.

அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய தேரன் கண்ட உண்மை என்னும் நூலில்

மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள

மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்

கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா

யாமலக முண்ணமுறை யால்

பொருள்

முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர்.

அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம். இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.

நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.

ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

நெல்லிக்கனி பித்தத்தை சமப்படுத்தும்

பித்த அதிகரிப்பே முதுமைக்கும், உடல் சோர்வுக்கும் முக்கிய காரணமாகிறது. பித்தத்தைக் குறைத்து உடலிலும் இரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளை உடைத்து கரைத்து வெளியேற்றும் தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு.

நெல்லிக்கனியின் சிறப்பு

நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது.

ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.

நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.

இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

வாய்ப்புண் தீர

நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

பித்தம் குறைய

15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

இரத்த கொதிப்பு நீங்க

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

கண் நோய்கள் தீர

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.


விளாம் பழம்

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.
பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

நபிமருத்துவம் வெந்தயம்

| சனி, 4 அக்டோபர், 2008
நபிமருத்துவம் வெந்தயம்


வெந்தயத்தைச் சாப்பிட்டு உங்கள் வியாதிகளைக் குணமாக்கிக் கொள்ளுங்கள் என்று எம்பெருமானார் நபிநாயகம் அவர்கள் கூறியதாக ஹதீஸ் திப்ப நபவியில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

வெந்தயம் ஒரு மா மருந்து என்று சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபி நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். பேரிச்சம்பழம், பார்லி, அரிசி, வெந்தயம் ஆகியவற்றைத் தண்ணீரில் வேகவைத்து அதைத் தேனில் கலந்து லேசான சூடு இருக்கும்போது நோயாளிகளுக்கு அக்காலத்தில் அரபு நாட்டில் கொடுப்பார்கள்.

இஸ்லாமியர்களின் பிடித்தமான சமையல்களில் ஆட்டுக்கறி, வெந்தயக்கீரை, உருளைக்கிழங்கு கூட்டும் ஒன்றாகும். பொதுவாக சமையல் பொருளாக அனைவரின் பழக்கத்திலிருக்கும் வெந்தயத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கின்றது.

நம் நாட்டில் அனைத்துப் பாகங்களிலும் வெந்தயச் செடியைப் பயிரிடுவார்கள். இதன் இலைகளைக் கீரையாகக் சமையலில் பயன்படுத்துவார்கள்.

மழைக்காலங்களில் அதிகமாக விளையும் வெந்தயச் செடியில் பூக்கள் பூத்தபிறகு சுமார் இரண்டு செண்டி மீட்டர் நீளமான காய்கள் காய்க்கும். உலர்ந்த காய்களில் மஞ்சள் நிற விதைகள் இருக்கும். இதைத்தான் வெந்தய விதைகள் என்று கூறுவார்கள்.

மருத்துவ விஞ்ஞானிகள் வெந்தயத்தை ஆய்வு செய்து பார்த்தனர். அதில் மீன் எண்ணெய்க்கு சமமாக எண்ணெய்ச் சத்து இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தவிர, பாஸ்பேட், லெசித்தின் மற்றும் நியூக்லோ அல்பூமிக் ஆகியவை அதிகளவில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. எனவே ஊட்டச்சத்துக்காக மீன் எண்ணெய்க்கு மாற்றாக வெந்தயத்தைப் பயன்படுத்தலாம் என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் நரம்புத் தளர்ச்சி, நாள்பட்ட வியாதிகளுக்குப் பிறகு ஏற்படும் பலவீனம், நரம்பு வலி, தொண்டை வலி, கழலைக் கட்டிகள், வீக்கங்கள், மார்புச் சளி, நிமோனியா ஆகியவற்றுக்கும் வெந்தயத்தைப் பயன்படுத்தலாம்.

மாதவிலக்கில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கைத் தடுப்பதற்கு 3 கிராம் வெந்தயத்தைத் தேனில் கலந்து இரண்டு வேளை தரலாம். வெட்டை நோயால் தொடை மடிப்புகளில் வரும் அரையாப்புக்கட்டி, கழலைக் கட்டிகள், பொதுவான வீக்கம் ஆகியவற்றைக் குணமாக்க வெந்தயத்தைத் தண்ணீரில் அரைத்துப் பற்றுப்போடலாம்.

5 கிராம் வெந்தயத்தைப் பவுடராக்கிச் சிறிது சமையல் உப்புடன் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி, அஜீரணம், வாயுத்தொந்தரவு, இரைப்பை பலவீனம் ஆகியவை குணமாகும். 6கிராம் வெந்தயம், சர்க்கரை ஆகிய இரண்டையும் பாலில் கொதிக்க வைத்துப் பாயசமாகக் குடித்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். 9 கிராம் வெந்தயத்தைத் தண்ணீரில் அரைத்துத் தினசரி ஒரு வேளை சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.

ஹைதராபாத்தில் ராஷ்டிரிய போசன் அனுசந்தான் ஆராய்ச்சி நிலையத்தில் பல ஆண்டுகள் சர்க்கரை வியாதியைப் பற்றிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது. சர்க்கரை நோயாளிகளுக்கும் இருதய நோயாளிகளுக்கும் தினசரி 20 கிராம் வெந்தயத்தை அரைத்து 10 நாட்கள் கொடுக்கப்பட்டது. இதன் பலனாக இரத்தத்தில் உள்ள ஆல்கஹால் குறைந்திருப்பதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படவில்லை என்றும், தினசரி 20 கிராம் முதல் 100 கிராம்வரை தேவைக்கேற்றபடி சாப்பிடலாம் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்க்கரை வியாதியைக் குணமாக்க சில யுனானி வைத்தியர்கள் வெந்தயத்தை மட்டும் தனியாகப் பயன்படுத்துவார்கள். பலர் பாகற்காய், நாகப்பழக் கொட்டை, வெந்தயம் அகியவைகளைச் சமஅளவில் கலந்து பவுடராக்கி ஒரு டீஸ்பூன் அளவில் தினசரி இரண்டு வேளை சாப்பிடுவார்கள். கிராமத்தில் சில யுனானி வைத்தியர்கள் பாகற்காய், நாகப்பழக் கொட்டை, வேப்பிலை, பிரிஞ்சி இலை, வெந்தயம் ஆகிய 5 பொருட்களையும் பவுடராக்கி வேளைக்கு ஒரு டீஸ்பூன் வீதம் இரண்டு வேளைதருவார்கள்.

டாக்டர் காலித் கஜனவி என்பவர் கருஞ்சீரகம் 12 கிராம், காசினி விதை 6 கிராம், வெந்தய விதை 6 கிராம் அளவில் சேர்த்துப் பவுடராக்கி மூன்று கிராம் வீதம் காலை- மாலை இரண்டு வேளை தருகின்றார். தொடர்ந்து 6 மாதங்கள் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குணமாகும் என்றும் அவர் கூறுகின்றார். நம் நாட்டில்;; வெந்தயத்தை மூலப் பொருளாக கொண்ட பல யுனானி மருந்துகள் கடைகளில் கிடைக்கின்றன.


உருளைக்கிழங்கு

| திங்கள், 28 ஜூலை, 2008
புனைப்பெயர்
ஸ்பட், மர்பி, பூமி ஆப்பிள்
பணி
பல நாடுகளில் நிரந்தர உணவு, மற்ற காய்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, சூப், சாலட், கூட்டு, குருமா குழம்பாக பாpணமிக்கும். வறுத்து, அவித்து, பொரித்து சமையல் செய்ய ஒத்துழைக்கும்.
உபரி பணி
பசை, ஆல்ஹால், டெக்ட்ஸ்ரோஸ், குளுக் கோஸ் தயாரிக்க பயன்படுதல்.
பிறப்பு
18-ம் நூற்றாண்டில் பிரஞ்சு மனிதர் அன்டயின் அகஷ்ட் இதன் பூவை முதன் முதலில் சட்டை பட்டனில் சொருகி கொண்டார். அதன் பின்னர் பதினாறாம் லூயி காய்கறிபோல சமைக்கலாம் என தனது ராஜசபையில் உத்தரவிட்டான். அதன் பின்னர் உலகம் முழுதும் பரவலானது.
எதிர்ப்பு
ஆரம்பத்தில் ஸ்காட்லாந்து பாதிரியார்கள் உருளைகிழங்கு உண்ணும் பொருளல்ல என்றார்கள். இதற்கு இவர் கள் சொன்ன காரணம்
பைபிளில் உருளைப்பற்றிய செய்தி வரவில்லை என்பதுதான்.
பயன்
உருளை சத்து மிகுந்தது. இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. மற்ற காய்கறியுடன் ஒப்பிடும் போதுகுறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. இதனை வறுத்து உண்பதைவிட வேக வைத்து உண்பதே நல்லது.
ஆலோசனை
உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
------------------------------------------------------------------


வாழைப் பழம்

மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.
எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும்.
ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் ஏ(A) உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் ஏ(A) உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.


கருகருவென்று கூந்தல் வளர!

| புதன், 11 மே, 2005
செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிதுயம் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிக் குளித்தால், தலை "ஜில்' லென்றிருக்கும். தலை முடி "புசுபுசு'வென அதிகமாய் ஜொலிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், அரை அடி கூந்தல், ஆறடி கூந்தலாகி விடும்

மருத்துவக் குறிப்புகள்

| சனி, 16 ஏப்ரல், 2005
நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
--------------------------------------------------------------------------------
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
--------------------------------------------------------------------------------
தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
--------------------------------------------------------------------------------
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
--------------------------------------------------------------------------------
வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
--------------------------------------------------------------------------------
உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
--------------------------------------------------------------------------------
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
--------------------------------------------------------------------------------
குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
--------------------------------------------------------------------------------
வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
--------------------------------------------------------------------------------
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
--------------------------------------------------------------------------------
மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
--------------------------------------------------------------------------------
சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
--------------------------------------------------------------------------------
பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
--------------------------------------------------------------------------------
மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
--------------------------------------------------------------------------------
வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்


இந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்

வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு. ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்;த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.
வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.
வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சு கள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.
வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவதே ஆகும்.



று, 14 பிப்ரவரி, 2010

ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்


ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகை-அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன் .
Botonical name-withania somnifera .

சீமை அமுக்கிரா & நாட்டு அமுக்கிரா என்று வகை இரண்டுண்டு.இதில் சீமை அமுக்கிரா கிழங்கே சிறந்தது..
மூலிகை வயாக்ரா-என்ற பெயரும் உண்டு.
இந்திய ஜின்செங் -என்ற பெயரும் உண்டு .

............................கோல 
நகுட வெருண்டுதிர நாட்டுவையேன் மேலை 
நகுட வெருண்டு று வாழ் நாள் .. அகத்தியர் குணபாடம்.

சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து உண்ண விந்துவை பெருக்கும்.
சமீப கால ஆராய்ச்சிகளிலிருந்து அஸ்வகந்தா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் அழற்ச்சி, வயோதிகம், போன்றவற்றிற்கு பெரிதும் உதவுகின்றது எனவும் உடலில் உள்ள Free Radicals ஐ வெளியேற்றி உடலை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
அஸ்வகந்தா பல ஆராய்ச்சிகளில் ஜின்செங்கை (Panax Schinseng) ஒத்த செயல்பாடுகளை உடையதாகவும் கண்டறியப்பட்டுள்ளது
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளை சரி செய்யவல்லது  அஸ்வகந்தா
அஸ்வகந்தாவின் நன்மைகள்
· உங்கள் திறமைகளையும் உடல் வலிமையையும் அதிகரிக்கும்.
· உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
· உங்கள் மூளையின் செயல்பாட்டினை பெருக்கும், ஞாபக சக்தி மற்றும் திறமையை அதிகரிக்கும்.
· உங்கள் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
· உங்கள் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைக்கும்
· உங்களுக்கு குதிரை போன்ற உடல் வலிமையைத் தரும்
· உங்களது இன பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஒட்டத்தை பெருக்கி உத்வேகத்தைத் தரும் (குறிப்பாக ஆண்களுக்கு)
மருத்துவ குணங்கள்
அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவ குணங்கள் கொண்டது. ஆயுப்வேத மருத்துவத்தில் அஸ்வகந்தாவின் வேர்கள் (கிழங்குகள்) மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. அஸ்வகந்தாவின் பழங்கள் பாலை சீஸ்1
£க மாற்ற பாலை கட்டிப்படுத்த பயன்படுகிறது. சமஸ்கிருத மொழியில் அஸ்வகந்தா என்பது குதிரையின் நாற்றம் என பொருள்படும்.




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0xlyGwN2HzBYdf0fsBFoiKl8r2FBemFNM3hyvL5XKZydqjnLzal0IWnUyE3ilBvW8JKA0MNtFo9MLNaoGlZUnbs2VAhDK51US7PwSIQQHjr7o_lg9yC5bvCKxjyURWkCJL8viOuVLz0o/s320/seemaiamukkara.JPG

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTm7YJAKpf61J-s_IRzYcIQlIX7q6UhPb_4Gj4DzacA557fy9sEY5q93To9ItvIL0ZlFfIgLzVN8IH8sS-P5dEOUM2c1AwHC-7RXgEnHnAA0n_HQDVIKoIrXJFFT0WCD6CG-pRguOSW98/s320/aswagnadaa.JPG

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkz0BXl5iN6W6mvVR7U68rUy0exz7_vZaiMmVqucqHtdhVvsTpoh0QqWBRgHxKY4R006Rvwh-QXq0N-ylHnqdyfzOc-d-zf0FldJ6JR7iHBvP5ViGFHvYE0RFXb1EfLes9QWYKb1pyMU8/s320/Withania+somnifera.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhBIHi8SGVa-MTsfKv1NwfJqctPuVKRsfhLfWtbgOIkT3ctsLKeBTOW2DPptslalpw8YmeO5n7pbT9pVf-crnZoOyGzfq68vCPb4xxYZ9mtB6iuUOIox5pnH41IiIUjqzsgOEi_GvjPJs/s320/aswaganda.JPG

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6UVAp_MbJbc1SWEyVtQHRkg4oXIJeQ99aHd4Mj8cI61T2NjD0Wl33-UQlPyDbKmvt1l9gFAsxuJrgmHVFxIkx9kAuQx6UHYHX88bZ3MYKl-mEfVFOibzArg6EStaI1iw7dUMqjRI34fg/s320/Withania-frt2-2400.jpg
curesure4u3:31 pmhttp://www.blogger.com/img/icon18_email.gifhttp://www.blogger.com/img/icon18_edit_allbkg.gif

மூலிகை கடை சரக்குகளின் படங்கள்(இந்த மருந்துகளை தெரியமா?)


பரங்கி பட்டை 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwQqbQRxXzn-0ZlDNfo6bRDJkbgNuD2jOZthHhxkhKqOcL7d3B_VVm6JRkzWrVjnHSfjD7mugGrMnDCmuND-SiC8m07HdmwZ1kPranqJWw2bY7N3c2UqZhwpQRbcS3W-vVwbi4uDY82vM/s320/parangi3.JPG



காயம் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8plYV2AGn_Yv4-5qyM1KvRNLw8A6LpNsqD34mqoTym7rrDaCxl_1Wh4md_PkMizzuH8LYKaQQ0oCfpBFLk73S5RNB65CS3Ew5sV9EqQ622Zr1KQf6DoSF7D4emgLIOAILz2wcINzSaWk/s320/kaayam.JPG

ஜாதிக்காய் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVPXRoseTgF8Ax65qxZesNQb0TaiTWMQ402xJIwHOuyBpwygzA62KvnA5rdV3Zby16dPlW_8VhyphenhyphenBvaIh8ZZa71I-UWNgHq6kciqOJ_fKgNV6BeY6J1Tdd3Txt3PxFutuOa12HFSfR83Bw/s320/jathikkai.JPG

தேவதாரு கட்டை 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrM_k8mWukQKNFp_L7-CvuhFKL5oIFyTiNiYJXdHUK_03YAoy7mn9hnBMBmuXzswbTwvqFk7aaO0-estnbtrrm66qmkficR7PXpDuE2rARY4kUGbxRgvYS3JWbO0-wfKdZGn3PyUfeSp4/s320/devadaaruu.JPG

அதி மதுரம் 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYoJzqZf1kX2nXJx6acYJ-pbWGI49tKErFcQYYhrjlPzJsh1Kii77Cqy_ouEj7L4ODNQsxVmsl679OxWGPPIm4PpnF-CMP4pexGndvh2Z13f1XvV2pc7WxslY2K1hyOzAlh4SmlYvxaxI/s320/athimathuram.JPG


சுக்கு 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgg0y07kN_143bdzRRXqqO5Ej-Y7B7rOcqMrP6YYEKpy8EdRwDD_mpW65XrZ_fq5z-VrV3UyUWkFlx1g7SvxYBjw1KAFmhNJhAUEPxLIRW-PabBPr01Lbt2j54VU7hExd5ABO9vEZWQG6s/s320/chukku2.JPG

ஏலக்காய்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi81M_E91IiISOTcJETEaBcFQjyzdJdKPyrk462tHQsxs_rxvdj4T_9AczdE0LYZVvAbCk4amWwH3NiDre_gFoX6yGyfvmUul0pDn15oC2EBjREDcSD72mJVNsdWpvUy6BiiirNUyQNkII/s320/ealakkai.JPG



கண்டங்கத்திரி 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqKBr4Yd55ThkFWk9LP_RStP4jCfO3M6f2PeFI-KzjgVNhCh1KAumNgHvnLvV0gsV0gUm3UIckUrkr54QcoXWNse_LuBCOXo6BVUTkPs9hpNxPTdo9_vtHpyX9tefccKAVMDLmkRgo8nU/s320/kandangkathiri.JPG


கருஞ்சீரகம் 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiN9zlINYXUwa1OAfMgD6NHmGgBa7FweWYlauZZyi_NwqI_iiIY8VgwkyCGqK1TiHVBJTAUI-YVft4xUx5qbWHCLOrAtoGwh1ezXRjBrgO0aBrWxPAAN0y63p-fS2nZd05E0v8dBkSQhl4/s320/karunjeeragm.JPG


கொடுவேலி 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMTXibl96R5fUqJ5AYT0oOgzWfUTegjA3SwNdlH4P9V9HA514NXppl7lSuBJ5RwcZU08Zi5f2i8rvjtqdrA8T5fXKqoCbcdZjhlQ7FtXTcHNxAfiLvA34CGONZ6_04KPIfFmDui5w2Dgo/s320/KODIVELI+KAAIVU.JPG

குருந்தொட்டி சமூலம் 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzYWZIq-7ryquumWLfNmxe_E1N-Axt_NL3YFJMdirBneEYHTJJcpstbzfWLg1CV5OCrp5N2UronKioA4Tk1Oub9IN7Eil2Nxq55Tr4kIQQyrAOiL52ZpVczQfUG0JBl4u-Wm7bPD0gW1k/s320/KURUNTATI.JPG


குருந்தொட்டி வேர் 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYrePLQ6hNA2FgKCVclfySKtJpAg7kOw4tpjVHC_nthw3cJR8PMsMeeyfTZdgU3XMw0KpybqKB6SLqz0_Wof_9whLOdoUxdrXbC7M8UM6AEGFo5VNmPGgFQ9LMwzkzNDdSdn1GdPAm304/s320/KURUNTATTIVER.JPG


மிளகு
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLIi1DP35jD7L1ozTSBJ337UTqzFCNQJISyzX4Eem5-vQM1vy8yc_1NE7_o6ynQjWV3QU8IkpJSUdl0hefmWQShTWDdjPP_tYY9ae6RfDwCeUpE-Xib1jZTdErAfz2AlZBmUueO-fak1M/s320/milagu..JPG



நிலப்பனை கிழங்கு
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiE2fMiBEF-qSlCa48B9yFM3PJ7c7Bj__HBNhZ3TzsP7L28C0LrFMg6j9A7yLNiCyZBC6P-WVQ-FOsBq_khe3rzJZGC35Vdd5EdiDnP7s5gm5nMhpw7Uz3uP3UWSmm2RxHSveMarrU8pck/s320/nilappanai.JPG



சாம்பிராணி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfTplgKLxd7y15Lx7rU7mvaY6UCYR_rpf2AaSQ2NCg-kJvrlbvRdt0KwDwXNrKmBlO8-VNk5ibXPSjKQL7EOLYL7JPLOITktMOnl1LYj_RpXAfKnRmi4vfFGBulGx_BsSADz3XX6sIDzs/s320/saambiraani..JPG

சதகுப்பை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsTA4Q7t5dciw-y9j8VYi_tkf75vJ6d0MDhF1M6QNDvCvBzaNQ2f4B6WKicnQxdVt0ZRLh0D_oaDogekJVuKannvGx88UQ9onACe2NOqeY6y2PaGOVISpJas8hCG8-Jum5EPltVFqUAUY/s320/sathakuppai.JPG




சீமை அமுக்கரா கிழங்கு (அஸ்வகந்தா ) 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSw1xJPho7-kmbs1GGGOZm6uvoVyiSqS5IesEsw0ruJGy2X0LDTTubYMnamTPsVrPWqzI7uzmR5mdr4FY-ANlFomLLjXIrgTLLiO69zBOT_a65tLrlRFDkQGPLz1GXK5cpuCYA39T8XVg/s320/seemaiamukkara.JPG


சிற்றரத்தை 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgixbxduq6gnDT14nl766XVGqrpOfIkDcC69vnLW7Mw5Au08SZJKiflPXJ1Ui4KgFn_nxMLnIz9h7vH6DDEdjZkUfB7AGATye-ZiFaYNA0P1Dium5rKnafHQyOUg-PdOZI6MAxFUv9h5Kw/s320/sittarathai.JPG

தேற்றான் கொட்டை 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgggRcUJXATPndtDgZWuxr_klNw2nx4JnxI-rll-_MXNVKHpSyG2fkR_wW69MctVC-S5wE9pufRYh2Db0UeJ55CMTifriBPtk_Sohl7Xboe6lx89PsY2LSD3QMYP3ryCaZjtg0AHvGpYiw/s320/thettan.JPG

வசம்பு 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyxI92QSawEtKZ0S4cDCXL70C6BgIzEIwbzUqCJMwxPAkGeL3b8zxDZ4s8K0TqjLRyQ73KZ4W7zSPF4w2YO5YoEfEeQoWnbRwBdHwoRm6cXMWfdcD6xxbLwCdQyBtUAMnZ4xLzeUDSn4k/s320/vasambu.JPG

வெள்ளை குந்தரிகம் 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgG53lHnGQAIRqy_6TesP2OZbslNko_jH6hlLJcdgIhQRHJaW49Cwk-lnPbZ0CQz7PWvBlxZKduVZpJHJ8Ox0k5R-lObUH80cTQLk-EwxiiJqijYTZfa5cXtS75tS76W3Hq7a-lo1TO19E/s320/vellai+kunthrigam.JPG

வெந்தயம் 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiubAgYSwY8gToiq_LzMSSJYmWnSSJbvCe6JcxrBdSL1X2ECIACvIpprxpx91eTOUMz5x2n2ToBgdCe95xi7p9YR4nC_B0LFsazQU4IyiKYubkGNsq8T9kxkNfEcGY_2cu7pffekpPRdkE/s320/venthayam.JPG





அற்புத மூலிகைகளின் படங்கள் (பூக்கள் & பெயருடன் )-part-7 high resolution herbal pictures

 முடக்கறுத்தான்,முருங்கை,நஞ்சறுப்பான்,நஞ்சறுப்பான்,செப்பு நெருஞ்சில்,ஆனை நெருஞ்சில், நெருஞ்சில்,நீல நொச்சி,வெள்ளை நொச்சி,ஓரிலை ,சிவனார் வேம்பு,தூதுவேளை,வேலிபருத்தி,கடுக்காய் வெள்ளை கண்டங்கத்தரி ,கொழிஞ்சி 

முடக்கறுத்தான்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5RqH5S3YI0nuY1uN2kMGaHyS24IkTy6xGEGfI3gbvV98sqGrVuDH-A0YqeHUZ408vLerKmSKVHeEsYgc95dpmqjFSITLWiVJWpHPBjkFP6stUYgsmF8T9EclOtdLHivDw5vXb6ZNvr74/s320/mudakkaruthan.jpg

முருங்கை,

  https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTdZiGq-Vbh8MJRjYrriAHFdezkMigjjI6X9ITIu8yjnZgUiL2WxdO3JHGyiaEZcfz690Inco9KI4JN4xztwPvakVsMyNi-V8GLmKeCWNKs8P-LfgUWDeaHroMv31f5a18SyI6nt_Pbog/s320/murungaib.jpg


நஞ்சறுப்பான்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVRIq2hOc_cVXTYVtjBNwdX1yTwGXETfOS9MGDgD9GTdvTdfLmCjfTYWAwIZbUZxQukydSZ_OO8FCPqdzwLSQ8e7Nv0ymVQxfAvV7lL5G-1EQ-HerKO9lT-uAJ_gGPxzSs56w2mJxQpPg/s320/nanjaruppann.jpg

செப்பு நெருஞ்சில்,

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuTcQp9RBqZ3mUL0cOXHtEC995swNHK0geHitUkh3gZ957Adv_ME9Vs3nxEGuafqrfZv1ost4jISd3pTgRuko7TJXbaO7Qr6saM2QE4i6hPsFhyARKSW4_Q1NxncGmovf58gihyphenhyphen6RvTSY/s320/nerunjil.seppu.jpg

ஆனை நெருஞ்சில்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEia6mPs8owXOHDnUN9oZQFufe0eqbSjKY2ZNP8L5OQg9IATgXDcvOFtZqfrt4aFH1bTuOid3JYbAb4RSf5HLztL6NVDan-7nWDqluy-8GZchfwlMt5M4UQ5DsZCWMEAe7OeXbRoeLPqSL4/s320/nerunjil+yaanai.jpg

நெருஞ்சில்,

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHpm-vlZjosfsinGMtRQJ7w_qCbwep5ld7uYM94rzWsGwrtvZ6zwwQyiF9SvhljU_D4HE-EnwMtEN5bSw8DUBQljqKk-RT2mR_w7r68iXQv63G7NAjbm8HTpK8ot4Lopwoh41-KIED1yk/s320/nerunjiol.jpg

நீல நொச்சி
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheXET6sx4gwJJntK3GfXIkkHQk_Yapx7RuweUvUouPclwaqg1k2SEYftk6APbJEOKh4TrI5o-_5T8bukAzUJdGNqP9n8MzPDhM38xmgeNox3FVbaf6UYrhqVN9mu6lW66Qtq0yVjyKlfM/s320/nochi+neelam.jpg

வெள்ளை நொச்சி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihvAi6IsS-rPPXz9MH9UZ-Lf2vF12Fd8qYIBzC-du_xwEsTYancOh5qTNoYtD10xCZESth6TIdJIjMkFcMp5bHF_m7dW3AiwuAa_nvUFPWJqma9Ase_Ue7F4oReWW2VK3GS5Yr1Dq2Skc/s320/nochie.jpg

ஓரிலை ,
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiK_aiijrzt5lbDx95zoe4ij2d-D10osW3QcjwE2Qidzmr1M-whbsf4SQzo9Fb-4lM6OHPjr6XX941PJoJb1suWGSsvDP7DJUJrh3pqmjHLXaNXwR6L8ny_uR70TmenTGXygns8lHy4dkU/s320/orilai.jpg

சிவனார் வேம்பு,
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbqhlUwjabwx_v1haQzb5pMQKdmJK3MzviYo-b8J5Xt3Z6vM_JTlDdWMaQa-NukdUxJbcNV4bLld1KPVZHuzM4MvIb69Si3vQ1dbStqHUgcaRuMrBXRr27XEnO84H_Z4b4YclzfDhxJLI/s320/sivanarvembu.jpg

,தூதுவேளை,
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaM1MrWjjZUmkKxpG4D-wBaO8HzL4u_KPot6WvcxV4aUZyJWz07-z8yfrqVNOxgmJLbLeXHQZYpkxHKVO7b22-MbrcTCtJJIAdBwhsaHpZLqOYo22XrvLY7vu1PMks63RteAVx2PFVHks/s320/thoothuvalai.jpg

,வேலிபருத்தி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdPkqE1YXH6i46rLAROk6MmK0c4ij2HoFEZqNRrVJA7JluVfwTUJSd8t-Ul6DPnXVqkgaSySQ6J8bCQnUDs4eWqCyVQTrwVvJEXPOIMHeF7BEtP8Oq3gKqYvP0BKBBi0HqhXQVQjjUW1E/s320/veliparuthi.jpg

கடுக்காய் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN75b4CpvL8sssnmeLF_1ke7asSsN1D0Y3ZAgOAwgzMDSrEG2Rr0MYH2DyNPrWzpzWhr45rZjTsm2rBQ8lqtU-5DnfFJdPwaDWmBVRSK3NFyzdC7OnaEhyphenhyphenB4f1anKWFjc2ZT0Jov-jauI/s320/kadukkai.jpg
வெள்ளை கண்டங்கத்தரி 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_Q3iPovH-ilHYkcn2uCJ75-HREnp9iQRJhdNkBPxcDlmf6V5yaSsYJd4zDP-Y2FYWpZCnzuWF2SU2uVxaInDHLSrwXVoNsVMtoanuNQyaIM7IgW4B_IEF-HSsvL-IsCK5iIC_HEp-ayw/s320/kandankathiri.jpg


கொழிஞ்சி 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnwXhqJZ_v6QtMacSQgquyfdzkyfkwua4j8P_M3gEQqgOE0bdWSOhj5DkoqHTpDAMR8aqx8nu1VZOZ7f5SbhYil2LzhR8TzzBUcaQe-RuCigZZpLPtcJ4Sqma10fyLi_8G1cBFemsOkdI/s320/kolinji.jpg


முடக்கறுத்தான்,முருங்கை,நஞ்சறுப்பான்,செப்பு நெருஞ்சில்,ஆனை நெருஞ்சில், நெருஞ்சில்,நீல நொச்சி,வெள்ளை நொச்சி,ஓரிலை ,சிவனார் வேம்பு,தூதுவேளை,வேலிபருத்தி,கடுக்காய் வெள்ளை கண்டங்கத்தரி ,கொழிஞ்சி 
curesure4u9:23 am1 comments http://www.blogger.com/img/icon18_email.gifhttp://www.blogger.com/img/icon18_edit_allbkg.gif

வியாழன், 4 பிப்ரவரி, 2010

அதிசய மூலிகைகளின் படங்கள் (பூக்களுடன் )-part 4 high resolution herbal pictures

பிரண்டை சதுரகம், பொன்னாம் காண்நீ(பொன்னாங்கண்ணி ),முசுமுசுக்கை ,வாத நாராயணன்,விஷ்ணு கிராந்தி ,ஆகாய கருடன்  கிழங்கு  


                                                             பிரண்டை சதுரகம்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0stXzOguUrkS5kJomQ2PDNg7h8KP-py2VGdaCqUbJhK1FkGs6oZvp54hEZ-IqJXPEjrQUUjwvFJlh_euM4EAEoD4Pd8leZZMFwFy8GbCJJSLGKt-_jf3h2aOvcdDRF803MwrFRYuTTyo/s320/420.pirandai+saturam.jpg


பொன்னாம் காண்நீ(பொன்னாங்கண்ணி )

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoTuaSN053Gv9yNFBZuG_t89gQqBjJOdv7_1SN7clHE6f29UlR-hTUITfwLLpPAXZDan6XQHWWWgrtzHD47ZRMRee2N12LOHE3mfNElPtQnHzacDd3DVNVZSofTPe9qUSWQzltdJfrzeQ/s320/443.ponnamkani.jpg

முசுமுசுக்கை 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQoLbNYVBg2qHBR0reI1YzQxjolKFP90C9iNEy7aAE6w81yvmvRFXYWB8UWNxrixjSHSxg3rr4uStdlCjushrAnN7qSHmVWiGVtYL3WXLJYU1AXoevi0vresPW2Htm1BA27dRoYAtdRVs/s320/475.musumusukai.jpg


வாத நாராயணன்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisuEtTxNJTiUzFcjQc43CrCX2FMXp3zVu-Lw16cHlvztFeyk1L2gVdMr2gZPAYstfAhVzhGLbzgUFcQcaSJal8JB-UWopQfQe2bqK-Bz4pZs5jIpQSM_Mdm8eNq_aVbTByrBX0qctzWmQ/s320/498.vathanarayanan.jpg

விஷ்ணு கிராந்தி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8imHGNh5-iooTgF1clj0Xaw07Xx-VZDBAN2uYqBL9VeILIL_PRhuxHdFlKJWN5VkjgUcqzTqlMPY2XR8iLNNG2NNFh3xVq_SPXoPkXWsGh-DDw5sy4GH1h9eEpYGk76ktR5a46mlFwc0/s320/512.vishnukranthi.jpg

ஆகாய கருடன்  கிழங்கு 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWfS381PIvo_6OsJqaSewdOCsBK-2TzyIr2olJkAwHegWPYBMfYSgBSeSOcSRKuOqUjztW9R5ysGC8AjPOqVYpVoyY5o_3Uck9Pe5QN4x79YF73Ra3FXCYQnJgCfylis-WxssWm2K6DXA/s320/aagaasakarud.jpg


பிரண்டை சதுரகம், பொன்னாம் காண்நீ(பொன்னாங்கண்ணி ),முசுமுசுக்கை ,வாத நாராயணன்,விஷ்ணு கிராந்தி ,ஆகாய கருடன் கிழங்கு 

curesure4u10:10 pm1 comments http://www.blogger.com/img/icon18_email.gifhttp://www.blogger.com/img/icon18_edit_allbkg.gif

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

மூலிகைகளின் படங்கள்(பூக்களுடன்)-part 3 high resolution pictures


நாய் துளசி ,தூதுவேளை ,தேற்றான் கொட்டை,தொட்டால் சிணுங்கி ,நன்னாரி ,நாயுருவி ,நெய்தல் கிழங்கு,பற்பாடகம் 

நாய் துளசி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBpAsaEAAfbjTtWqulT1f9uUyFILjZymCtuvsa7H-7k5tc-Sg8ui71rD8Y_kWCAbn_wmKFSTTN2fMbwyDl9MyvxQ-T3cB06LcF-_P3EQqrPbHbWYaNxNq8L5ca_v5KpHeaTt7FmFaUUmo/s320/348.naai+thulasi.jpg


தூதுவேளை 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOSieDJFf6mhWf7iE0cxaDyobILQdoD_GgeyVwWeUxCJTEO613oVpgSN-CjXbEFSUm8CuE3gArL21mRPNw4hR7s4PjOQsSWphXV1wl3GdFH3CE2hFX2LFH-hOfgtUYM6nqJaTo-pjfOjw/s320/349.thoothuvalai.JPG


தேற்றான் கொட்டை,
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-jxoBdkjSe6csH5FGdkgWjG1xe7zzqc6LLU-RUMZwIPwOanFh9F3-pGZe8monTulq4J9kOH_4FZMtiFr88eBWnoOtumc5Ngb0hOP4sw00E90pLjl3zM_LZGm_PmfZq7-kkWNq4D_KQqo/s320/355.thettankottai.jpg

தொட்டால் சிணுங்கி
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgslbxw0q4KImk0YQrbtnpeiPZRcChz-MmukupNBWcK4NPcaNLzv3F4ofjuB3mKqTOREaq1BRstNwnyo3RQueV0C64enjwiVRpOpP-P1JOCLf-yBdfD2EzJS8LMsIEymKho91W2SkB3EPM/s320/356.thottal+sinungi.jpg

நன்னாரி 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGbXZKooSIi67KEruZclZZqHVVAJfRRkNdKXkWv5jdkwXO6g6c16m7m6ayUG9aPC08dQbx6e_udhkVAjuBjEazzBS6CUzF9Zjt08z1mNrq52Goc_qKoWa70ECpRaScig8xh5Sw7wvKQOc/s320/364.nannari.jpg

நாயுருவி
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIl6Q6yJQjcozHC_wZt2n0ViaejlECDBE1i2l7UFl1V1Om0L6oclQQRqU2Pg2d0Y6ZNvg4MBfSvKKjZYtLBwGQeb3sPbyhWVMBXIGMZB9Dbhfub7GbGrCgDOtNzqV_OTB3rfWP_yL7KrM/s320/369.naayuruvi.jpg

நெய்தல் கிழங்கு
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE86RmtsRRNCRqLCfir0DANd15OOqY89lMqaoPvYIVQi7b-8N7WqsqFIjJEP6XD7jF02ERfCj_1RrjjzQGiHWl4lv6PNJvYN0-sb2dbuUIOaPzRL1duL_3YGvr7fWYmL667ep_d8BnSLE/s320/389.neithalkilangu.jpg
பற்பாடகம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgQHWR5sgxa3xW4REUL9renSWmu3oqcDZVc0BvU_Ko4WXCWUNkvaWk37pqYyD_raoJl41ve7VM_utDGVlZr6iye-iMdeBEJTcflbxguPLIf43O2ZjCEYdSOw0HhkT-Crs9bws3avovUYw/s320/407.parpadagam.jpg

நாய் துளசி ,தூதுவேளை ,தேற்றான் கொட்டை,தொட்டால் சிணுங்கி ,நன்னாரி ,நாயுருவி ,நெய்தல் கிழங்கு,பற்பாடகம் 
curesure4u8:50 pm0 comments http://www.blogger.com/img/icon18_email.gifhttp://www.blogger.com/img/icon18_edit_allbkg.gif

மூலிகைகளின் படங்கள் (பூக்களுடன்)-part 2




செங்கொடு வேலி, வெண் கொடு ,வேலி கொத்தான், ஜாதிக்காய் தண்ணீர்விட்டான் கிழங்கு, தும்பை ,தழு தாழை ,கருந்துளசி 


செங்கொடு வேலி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsx0-Fkrv9X9viWPUwGEz6AYnJrcMjJ7YNfuhwDEG5zAE2FgiBfioRkEhyphenhyphenqtznQOLqEJ3PFzVc9TF5Q2WhSttetEQbtI2gL_vrCl28CI0_cTKLrMgGFzrbgXby7CGwEOuXMav1PQ7T6Oo/s320/248.sengkodiveli.jpg


வெண்கொடுவேலி

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjs51mMmvq1idawVBRnPlvU_tsF8V0vouSrgFMOuZMu4xIvIs4cvBqYh6j8nap3N7-SQdtu1LB0fIKwB3yUybeT5_LR6KttoHM0G5e1GSKX2PRN3EoKoATWzmxLbvkycHQ4-pys2kaqKng/s320/248.venkodiveli.jpg


ஜாதிக்காய்,

    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd30GJqoh8kMIIy9YmEWAE1kba8AOQS4Gg-L1Y56VALn6iN6QloiOQyAyhO-ATGPdbP_fF4k6kwnwG_x7PkWjaVJMhJn0awb0esxJfM2GNzsTEuCrsd1nRIIjcDMx1CpMz1lECQ12gh28/s320/275.saathikkai.jpg


கொத்தான்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQVzOVjUbXE7g4nm-JRlwb51YZW1qOB0sa-D_b8mloppPJ0L4OjnufL3sFLj7vVgedyiM74PnnBPwq6wE66NJNFTv4IxwOBVexPuoSSReMmx856QoHoRwwrFPyXe1VjmxP9vJ0AQnhm3U/s320/251.kothan.jpg


தண்ணீர்விட்டான் கிழங்கு
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiiPhPilBIiaxtSMi5WMl3sX0VPIdyW40f2ZuCrAmo6EEe-i8iiN7esrH_UUpZlzgt67r2NfdaeUfi9RtsQBoL9GLJa5nuWXLQrM0XUeY0N2r-pjnTEBoN53Um-Zgj3VggQkXec-y37lU/s320/325.thannrvittan.JPG

கருந்துளசி 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1PTTemgAVn1HsPAJpQ7GVRZItb6nesfWFzf2PlINfPMLZliTiYChTZOTU9wMXSkvAN2hDUmxUKs0224ewT68mLgg8iIyLewmUWGAB5aQwV4vNASNSPq35Y3KoOewsN4V5Y2TxW5cZuno/s320/348.karunthulasi.jpg



தும்பை
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_4ObVEVP8B6coGj1F2C_4k6ZcI7qnBw2Js5pvM6rSMQYSi2zNWaIj4eo7XD7LlUMh3he6IImXRIoFlDa9eP7qXE5Iz_TAUEqrX-VDen-Un5IgWB2GM5aq5bm0eT32mvFmF3gReqQ4urA/s320/345.thumbai.jpg


தழு தாழை 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqDuc3IGxFy1q7tjvYPh7pEMlFzV5aPuftNt5_AkeEJnW9xWDMPGNXNPm95BN17HLe4ZZnZIyXPA6cXxpb4DJO1FO_Kx94k-oaqQZ6Q8ODtBuDl4DCX90uXHONwdYBoWpKug80Y2mt4lk/s320/330.thaluthaalai.jpg,
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOu5byfI1fdPfBdOWc8_1c64ejq9j5CuOWFMWE9j3VycaTX-7E5fFY2sm_TECtO4R_ZrC8xLR3qzchDEIvDhXgIJ8Un8U-0SghCnZJ2o9KflGEP4HAuqK_Y_4NGTyu3NNFjXuwNlMAw-Y/s320/thazhu.jpg


செங்கொடு வேலி, வெண்கொடுவேலி ,கொத்தான், ஜாதிக்காய், தண்ணீர்விட்டான் கிழங்கு,தும்பை , தழு தாழை,  கருந்துளசி 
curesure4u6:50 pm5 comments http://www.blogger.com/img/icon18_email.gifhttp://www.blogger.com/img/icon18_edit_allbkg.gif

மூலிகைகளின் படங்கள் -பூ காய்களுடன் -part 1



மூலிகைகளின் படங்கள் -பூ காய்களுடன் 

ஆடுதீண்டாபாலை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja6rqKIt_ucjXqd5p0gXEmq7KDw4pGQ2TUpmo3jFH36ZcXsf03V4KftD2e63obZMu5qJtU6YHkPUYC-6de-b0tIAOTZOeKfybQh3TEisz9pzyn4WbBfVZLX7-m9WhmJGols8VwKIGwYxk/s320/35.aadutheendapalai.jpg
ஆவாரை 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikmEQKOdCtttzm9lwXTEBwsprfx1FirSB82_nT3wROGtNpShkc_ddgi3WiVI5bSf4vGzJr4yOZ-ILcoEolatOpqTa5c2nb7A2lOnnwYONrIKSs1wXCDtyWw2hJUwb6dPlDJ1U4U5SXPg4/s320/43.aavaarai.jpg


இசங்கு
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwsbXa2tM6_FUGc6WvnfEjPgdMxTqdCxlj4gAtmfh2ZKSwqg0O7A1WktsKzF33Kti7BaId9Mu_REG-I4w5FNejS-Q7yz4rGZwg946kiH0Wk0zioAjXEFudiSkePDNgU_hSS8gh1Q6C6-4/s320/52.isangu.jpg



வெள்ளை ஊமத்தை
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyUt55duKUx0tdChFCX7sG-RFPzBES0ELFn9sEdaQu_TZuGiFfFiwT_6ORxxwiMQjGwr7AqPBLZtCImAyRwp02_cfUDW5XM-7-kw4ERfWNVucH_GndACSFFRxkNCsLmZy9c67IbrZtOOQ/s320/81.vellai+oomathai.jpg



எலுமிச்சை
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOPV1sGjIRNS-GqNtqosBQ5zgjSaw9OlGf28qiCtrcSW004XSeE_69gqGp-mYCK9gp3SRXkeEeK9n_SmyN45NCwsuMZ6c0WEQo29y5TD1mG5ojNinNbji1BtxhvS3GY1l0x6feITREQ0M/s320/88.elumichai.jpg

கண்டங் கத்தரி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQ5uyp_0t5PxEan-1gxWPfgn7F1MS_DIdiE9d6tJxzyPiqdLzKeRQ7MZL5fHlJBzhy0zzb7vO1z3WEC8Fywj3MM88UDRudca6SzvucatPWA-OWthwk2acv73RYbS2N48n8h-x9AYwjG-w/s320/118.kandankathari.jpg

கழற்சி 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiflCfGAvnEUog2PG8sMpch7L3m6t9Tu7t_smPNjUWJ8sHC9z5mgS0jF6riVPZKf2FxBzcASGVW8FKh2kxXSyo420E0GQC1FUuUyW3RbvYv9DPFpS7oGQDqnXz12VJqMSzUUd5XAUpK9I/s320/141.kalarchi.jpg


குப்பைமேனி 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0eKaVbEy8tPJlXIVesbKyP7CPMM9yHC0z9C4egVHX2wJ9uXO8q2j_PMHn5ddW1t6Rdte25xneZx_5aWTAVHY-3qd9nrjgoXw3DJf_07x7KiAG1uZynZI5rB0m_D6ixSVjybt01pZVZoI/s320/232.kuppaimeni.jpg



ஆடுதீண்டாபாலை ,ஆவாரை, இசங்கு ,வெள்ளை ஊமத்தை ,எலுமிச்சை ,கண்டங் கத்தரி ,கழற்சி , குப்பைமேனி 
curesure4u8:42 am3 comments http://www.blogger.com/img/icon18_email.gifhttp://www.blogger.com/img/icon18_edit_allbkg.gif

இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

இலவச ஆலோசனைக்கு அணுகுங்கள்

ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை இலவசம் - இ மெயில் curesure4u@gmail.comதொடர்பு கொள்ளவும் ,செல் போனில் தொடர்பு கொள்ள 96887 78640 (மதியம் 3லிருந்து 5 pm IST வரை). கருத்துரை தெரிவியுங்கள்.இந்த தளத்தை பார்வையிட்டதற்கு மகிழ்கிறேன்
ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை இலவசம் - இ மெயில் curesure4u@gmail.comதொடர்பு கொள்ளவும் ,செல் போனில் தொடர்பு கொள்ள 96887 78640 (மதியம் 3லிருந்து 5 pm IST வரை). கருத்துரை தெரிவியுங்கள்.இந்த தளத்தை பார்வையிட்டதற்கு மகிழ்கிறேன்
http://img1.blogblog.com/img/icon18_wrench_allbkg.png

Labels

http://img1.blogblog.com/img/icon18_wrench_allbkg.png

Blog Archive

http://img1.blogblog.com/img/icon18_wrench_allbkg.png

என்னை பற்றி

எனது புகைப்படம்
curesure4u
I'm DR.Curesure4u .,B.A.M.S.,M.Sc(Psy).,PGDGHM.,PGHDGC.,PG Dip Yoga.,PG Dip nutr diet.,PG Dip.Acupuncture.,MBA(Hosp.Magt).,FCLR., my mail id-curesure4u@gmail.com. my cell no- +91 96887 78640.
http://img1.blogblog.com/img/icon18_wrench_allbkg.png
Tamil Blogs & Sites
http://img1.blogblog.com/img/icon18_wrench_allbkg.png

என்னுடைய மற்ற தளங்கள்

http://img1.blogblog.com/img/icon18_wrench_allbkg.png

எனது Forum த்தில் புதியவை

drsuneelkrishnan
2/11/2011
அன்றாடம் மருத்துவர்கள் சந்திக்கும் நோயாளிகளில் பெரும்பான்மை நிச்சயம் மூட்டு வலியாகவோ ,முதுகு வலியாகவோ தான் இருக்கும் .எனக்கு தெரிந்து நாற்பது வயதிற்கு மேல் உள்ள அனேகர் இவ்விரு…
Admin
2/11/2011
நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை -நெருஞ்சில் (படத்துடன் ). botonical name -tribulus terrestris.. செப்பு நெருஞ்சில் திரிதோடம் போக்கிவிடும் வெப்பு முதலனைத்தும் வீட்டுங்காண்-செப்பரிய…
Admin
2/10/2011
சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம். சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம். (சஹஸ்ர யோகம் ) சேரும் பொருட்கள் .. பேரிச்சம் பழம் கோரை கிழங்கு நெல்லிக்காய் கொன்றை பட்டை உலர்ந்த…
மருத்துவன்
2/10/2011
Macuna pruriens or Poonaikkali : Natural treatment for Parkinsonism, infertility etc http://www.youtube.com/watch?v=5BZIqUVmCIs&feature=player_embedded Plant name : Poonaikkali “It contains Natural Dopamine.…
Admin
2/9/2011
நண்பர்களே . நலமா ... நீங்கள் என்னிடம் மெயிலில் ஆலோசனை பெற விரும்பினால் ..இந்த முறையில் கேள்வி கேட்டால் தான் என்னாலும் மற்ற மருத்துவ நண்பர்களாலும் பதில்…
Admin
2/7/2011
ஜனவரி திங்கள் இருபத்தாறில் ஏற்பட்ட பெருத்த மழையினால் -சௌதி அரேபியாவில் ஏற்பட்ட கஷ்டங்கள் பல .. அவைகளில் சில் உங்கள் பார்வைக்கு .. آثار أمطار جدة
Admin
2/7/2011
விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை- ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்) botonical name- myristica fragrans விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன,அதில்…
Admin
2/6/2011
மூலிகைகளின் படங்கள் -பூ காய்களுடன் ஆடுதீண்டாபாலை ஆவாரை இசங்கு வெள்ளை ஊமத்தை எலுமிச்சை கண்டங் கத்தரி கழற்சி குப்பைமேனி ஆடுதீண்டாபாலை ,ஆவாரை, இசங்கு ,வெள்ளை ஊமத்தை ,எலுமிச்சை…
Headlines by FeedBurner
Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

http://img1.blogblog.com/img/icon18_wrench_allbkg.png

இதுவரை எனது வாசலுக்கு வந்தவர்கள்

Visitors-total visitors count
hit counter script
http://img1.blogblog.com/img/icon18_wrench_allbkg.png
free counters
http://img1.blogblog.com/img/icon18_wrench_allbkg.png
Tamil Top Blogs
http://img1.blogblog.com/img/icon18_wrench_allbkg.png

தேடுகிறேன் ..

எனது கனவு மருத்துமனைக்கு ஸ்பான்சர் செய்திட எண்ணிடும் நல்ல உள்ளங்களை தேடுகிறேன் ..
http://img1.blogblog.com/img/icon18_wrench_allbkg.png

எனது பழைய பக்கங்கள்

by curesure4u
-
Feb 02, 2011
நண்பர்களே ..நலமா நாளை நிச்சயம் பதிவுகள் உண்டு ..
.
http://img1.blogblog.com/img/icon18_wrench_allbkg.png

Alexa

Alexa Certified Traffic Ranking for http://ayurvedamaruthuvam.blogspot.com/
http://img1.blogblog.com/img/icon18_wrench_allbkg.png

ஆதரிக்கும் நண்பர்கள்

http://img1.blogblog.com/img/icon18_wrench_allbkg.png

காப்புரிமை

MyFreeCopyright.com Registered & Protected
http://img1.blogblog.com/img/icon18_wrench_allbkg.png

காசில்லாமல் சந்தாதாரர் ஆகுங்கள்

Enter your email address:

Delivered by FeedBurner
http://img1.blogblog.com/img/icon18_wrench_allbkg.png

பிரபலமான இடுகைகள்

  • https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDlpEYkNt8UhS86QfL6Ts_pg61xVAMDlOiyp9D38VhHSMrr5RyzhU5_nB6lMCnk7IE1rhG1Cgz_RXK_v79umAwFG2HZCwKeZaMo2iKKHT5rb7aKMtvjN4VqjCeXmakaGKjuUb6D4jes7s/s72-c/jathikkai.JPG
விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்) botonical name- myristica fragrans  விந்து மு...
  • https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0xlyGwN2HzBYdf0fsBFoiKl8r2FBemFNM3hyvL5XKZydqjnLzal0IWnUyE3ilBvW8JKA0MNtFo9MLNaoGlZUnbs2VAhDK51US7PwSIQQHjr7o_lg9yC5bvCKxjyURWkCJL8viOuVLz0o/s72-c/seemaiamukkara.JPG
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகை-அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன் .Botonical name-withania somnifera...
  • https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8_OUOBaAC5_gAle_StrRKQdYH7FLQ9JdhiWVlLa9eYHpNyY81Ht38VJ6jIIsIzU255VQkMNqf7oDRxb-ONNQt0JONWo6bRdcFlgGD76CTSr-yAPtuWmAZHgsZtgkcCY7n6MSn15svAQI/s72-c/IMG_0627.JPG
பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா ?..வாழ்க்கை முறை மாறியதால் உடல் பெருத்த மக்களின் பெரும் கனவுக்கு இங்கே விடை காண முயலும் விதமாக இந்த கொட...
  • https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzSUwcl3druX9ff2IsxpRH36EP2pyEaMUtUSE-6IpEKiUVl1P2-7yC9baoo6_PUBQxM2NYMUh0JVP1unVefG1U80WE4BYMjjPyJjkkoAGA_NctBZDhHpqVSQleEd-UWSRXbXc6yOc3Ohg/s72-c/Hybanthus_enneaspermus_in_Talakona_forest,_AP_W_IMG_8339.jpg
விந்தணுக்களை கூட்டும் ,தாது பலமுண்டாகும் மூலிகை -ஓரிதழ் தாமரை (படத்துடன் )Botonical name-HYBANTHUS ENNEASPERMUS/IONIDIUM SUFFRUTIOCOSUM ஓரித...
  • https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFFgclSjyI0wUStpBaitDtRCQtnk3yLyBUkJVtuPBg_yM9WDB3ZTpHpxo2FOw6-LGgDhx-SvqbAdlcuUBVmdy0W8wjUB-T1modGm9yup5Ty7Uv7KTtdIpp2KpsLNQ-YE6YBR3apU4vstY/s72-c/horse.jpg
ஆண்மை அளிக்கும் அப்பம்  செய்முறை மருத்துவர் அன்னம் ,கோழி ,குருவி ,சிசுமாரம் என்னும் மீன் இவற்றின் முட்டைகளை சேகரிக்க ...
  • https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgM1z2lOb2HrVcovmw5rYLKXPMm9UN-Mg3lICCYI9bJDARbBUotzA6iyyr2BmCehGkL0sWHoaKd_iYteBCygCTdy1-oPDutceGAJpw4XN2jOAZ7aoINDVjv-lwkminoMQ1EyZeMaS9J1d4/s72-c/erumai.jpg
எருமை மாமிச ரசம்  செய்முறை -முளைக்க வைத்த தோல் நீக்கிய உயர்ந்த உளுத்தம் பருப்பு ,பூனைகாலி விதை -இவை இரண்டையும் நன்றாக அரைத்துப் பாலை...
  • https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsC4hyphenhyphenLm-wGrhUxke2HI_V4mt4yutGXK_QydpITDey9I7kDukYztWzPfnAX8EQxNptYR1RtbiHok2c8NttnfOea-jN9erBnDglgxBll6AcqiC0ezQxIOEwsUVaM4xRoeY1NPt7nwHckb0/s72-c/sperm_by_stratrx.jpg
ஆயுர்வேதத்தில் ஆண்மை ரகசியங்கள் (இக்கட்டுரை -விந்து முந்துதல் ,கனவில் தூக்கத்தில் விந்து வெளியேற்றம் ,விந்துவின் தன்மை ஆகியவற்றை ஆராய்க...
  • https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEim-vEl7IjODyog0Oehf1jGeCHgBsn5xICkrWUV0qhmRKjVCwqBncvujV38sOndVJL5UooN1KKgfrGBoduEF7bgnMXKcDiWLaG4lKSFnUSkoC9yyAAFfgNlr-DRapcGi6ITEvB6r43DxIU/s72-c/22072008136.jpg
மூன்று நாளில் சிறு நீரக கற்கள் கரைந்திட ..முடியுமா சார் -மூன்று நாளில் கல் கரையுமா ?.நிச்சயமாக கல் கரைந்திடும் .ஆனால் கல்லின் அளவு எட்டு மி...
  • https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-8-N3kwyzxzZoou6q2wBg_s61pnD1DTfZ5o3q8VogyBKA7GtdROtEMrmZ96KTcFwKopjl-_yzu1mvjkYymNItgu6LddFTTFrs29MrnDp5jkkgLbLU7Mzu4y_fcoLhjoKVwoH3W_JkL8w/s72-c/murungaib.jpg
நாம எங்கெங்கோ தேடி தேடி அலைவோம் ஆனால் வீட்டிலே இத்தனை மூலிகைகள்,உணவு மூலிகைகள் ஆண்மையை பெருக்கும் என்பதை உணர்ந்து சாப்பிடுகிறோமா நாம்?. முர...
  • https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih9N6Q6fRwWRtEWG8SSGkOLckwQe7f7pgxEEB_wI1CoZrxhJ90c61uz9UNkXaT8fHLhRC97reXGWjhgXMzmRqxMIBip7GaGRisxW4PAKATBHVA_F4IZi-RezfCsFkwV9OksxbqhJ641xE/s72-c/sparrow.jpg
ஆண்மை பெருக்கும் உணவுகள்  வ்ருஷ்ய ரசம் -ஆண்மை அளிக்கும் சாறு  செய்முறை -நெய்,உளுந்து ,வெள்ளாட்டின் அண்ட கோஷம் -இவற்றை எருமை...
http://img1.blogblog.com/img/icon18_wrench_allbkg.png